காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருகிறவர்களிடம் கண்ணியத்தோடு நடந்திட வேண்டும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் காவல் நிலையங்களுக்கு புகார் கொடக்க வருகிறவர்களிடம் கண்ணியத்துடன் நடத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, காணொலிக் காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது, முதலமைச்சர் அவர்கள் காவல் துறை மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு, குற்றங்கள் குறித்தும், அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். காணொலி ஆய்வில் கலந்து கொண்ட மண்டல காவல்துறை தலைவர்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கி கூறினார் கள்.