காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை:
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தால், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.